உதம்பூரில் நிலச்சரிவு - ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்


உதம்பூரில் நிலச்சரிவு - ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்
x

கோப்புப்படம் ANI

தினத்தந்தி 21 Dec 2022 4:04 AM GMT (Updated: 21 Dec 2022 4:04 AM GMT)

உதம்பூரில் உள்ள தேவால் பாலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

ஸ்ரீநகர்,

உதம்பூரில் உள்ள தேவால் பாலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. மக்கள் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டாம் என்று ஜம்மு காஷ்மீர் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போக்குவரத்து போலீசார் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், தேவால் பாலம் அருகே பெரிய கற்கள் சரிந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இருபக்கத்திலும் சேதப்படுத்தியிருப்பதால் அனைத்து வகை வாகனங்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவுகளின் உறுதிப்படுத்தல் இல்லாமல் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் பயணிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை இன்னும் மூடப்பட்டுள்ளது. முகலாய சாலை மற்றும் எஸ்.எஸ்.ஜி சாலை வழியாக போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.



Next Story