கிழக்கு லடாக் விவகாரம்: 16-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா-சீனா ஒப்புதல்

Image Courtesy: PTI
கிழக்கு லடாக் விவகாரத்தில், 16-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா-சீனா ஒப்புதல் வழங்கி உள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
பதற்றத்தை தணிக்க இருதரப்பு ராணுவமும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 15-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் இருதரப்பு இடையிலான ராணுவ ரீதியிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க இந்தியா மற்றும் சீனா ஒப்புக்கொண்டுள்ளன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





