டெல்லியில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


டெல்லியில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x

டெல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

புதுடெல்லி,

பருவமழை தீவிரமடைந்து வருவதையடுத்து டெல்லி, உத்திரபிரதேசம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்தநிலையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்க வேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகருக்கு திருப்பி விடப்பட்டது.


Next Story