தோட்டத்தில் கிடைத்த தங்க புதையல்: பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்


தோட்டத்தில் கிடைத்த தங்க புதையல்
x

மழைநீர் வடிகால் அமைக்க தொழிலாளர்கள் குழி தோண்டிய போது மண்ணுக்குள் குடம் புதைந்து இருப்பதை கண்டனர்.

கண்ணூர்,

கேரள மாநிலம் கண்ணூர் அருகே செங்காலா பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு மழைநீர் வடிகால் அமைக்க தொழிலாளர்கள் குழி தோண்டினர்.தோட்டத்தின் ஒரு பகுதியில் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. அப்போது மண்ணுக்குள் குடம் புதைந்து இருப்பதை பார்த்தனர். அதை தொழிலாளர்கள் வெளியே எடுத்தனர். இருப்பினும் அது வெடிகுண்டாக இருக்கலாம் என பயந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து குடத்தை சோதனை செய்தனர்.

குடத்தை திறந்து பார்த்த போது 17 முத்து மணிகள், 13 தங்க பதக்கங்கள், 4 காசிமணி மாலை, 2 கம்மல், வெள்ளி நாணயங்கள் இருந்தன. இதை அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் புதையல் பொருட்களை நேரில் பார்வையிட திரண்டனர். இதையடுத்து அந்த பொருட்கள் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story