மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு: தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி விடுவிப்பு; அதிகபட்சமாக உ.பி-க்கு ஒதுக்கீடு


மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு:  தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி விடுவிப்பு; அதிகபட்சமாக உ.பி-க்கு ஒதுக்கீடு
x

பண்டிகை காலத்தை முன்னிட்டு, மாநிலங்களுக்கு வரி பகிர்வுக்காக ரூ.1.78 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்குகிறது.

புதுடெல்லி,

வரி வருவாயில் கிடைக்கும் தொகையை, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பகிர்ந்து வழங்குகிறது. அதன்படி தமிழ்நாடு உள்பட 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு ரூ.7,268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதலாக ஒரு மாத தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதாவது கூடுதல் தவணையாக முன்கூட்டியே ரூ.89,086.50 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்கும், அவற்றின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த செலவினங்களுக்கு நிதியளிக்கும் வகையிலும் இவ்வாறு ஒரு மாத தவணையை முன்கூட்டியே விடுவித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. .

28 மாநிலங்களுக்கும் ஓதுக்கப்பட்ட நிதி:-

தமிழ்நாடு – ரூ.7,268 கோடி , ஆந்திரா – ரூ. 7,211 கோடி , அருணாச்சல் பிரதேசம் – ரூ. 3,131 கோடி , அசாம் – ரூ. 5,573 கோடி , பீகார் – ரூ. 17,921 கோடி , சத்தீஸ்கர் - ரூ. 6,070 கோடி , கோவா – ரூ. 688 கோடி

குஜராத் – ரூ. 6,197 கோடி , அரியானா – ரூ. 1,947 கோடி , இமாச்சல் பிரதேசம் – ரூ.1,479 கோடி , ஜார்கண்ட் – ரூ. 5,892 கோடி , கர்நாடகா – ரூ. 6,498 கோடி , கேரளா – ரூ. 3,430 கோடி ,

மத்திய பிரதேசம் – ரூ. 13,987 கோடி , மராட்டியம் - ரூ. 11,255 கோடி , மணிப்பூர் – ரூ. 1,276 கோடி , மேகாலயா – ரூ. 1,367 கோடி, மிசோரம் – ரூ. 891 கோடி

நாகாலாந்து – ரூ. 1,014 கோடி , ஒடிசா – ரூ. 8,068 கோடி , பஞ்சாப் – ரூ. 3,220 கோடி , ராஜஸ்தான் – ரூ. 10,737 கோடி , சிக்கிம் – ரூ. 691 கோடி , தெலுங்கானா – ரூ. 3,745 கோடி , திரிபுரா – ரூ. 1,261 கோடி , உத்தரப்பிரதேசம் – ரூ. 31,962 கோடி , உத்தரகாண்ட் – ரூ. 1,992 கோடி , மேற்கு வங்காளம் – ரூ. 13,404 கோடி


Next Story