மும்பையில் பேருந்து-டிராக்டர் மோதி விபத்து.. 5 பக்தர்கள் உயிரிழப்பு


மும்பையில் பேருந்து-டிராக்டர் மோதி விபத்து.. 5 பக்தர்கள் உயிரிழப்பு
x

30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பைக்கு அருகில் உள்ள டோம்பிலி நகரை சேர்ந்த பக்தர்கள், கோவில் நிகழ்ச்சிக்காக பந்தர்பூருக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். பேருந்தில் மொத்தம் 42 பேர் பயணம் செய்தனர்.

பேருந்து, மும்பை-புனே விரைவு சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story