இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு முதல் கூட்டம் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு


இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு முதல் கூட்டம் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
x

டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

பா.ஜனதா அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் நடந்த 2-வது கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் மராட்டிய தலைநகர் மும்பையில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டது. இந்தக் குழுவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட 13 பேர் இடம் பெற்றுள்ளனர். சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் இடம் பெறவில்லை.

இந்நிலையில் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் 13-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story