ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் தருவதாக கூறி, இளைஞரிடம் சுமார் 12 லட்சம் மோசடி


ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் தருவதாக கூறி, இளைஞரிடம் சுமார் 12 லட்சம் மோசடி
x

ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் தருவதாக கூறி, பட்டதாரி இளைஞரிடம் சுமார் 12 லட்சத்தை சுருட்டிய மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட மோசடி கும்பல், இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய இளைஞர், மோசடி கும்பல் தெரிவித்த பல்வேறு வங்கி கணக்குகளில் பலமுறை பணத்தை செலுத்தியுள்ளார்.

அதில் இருந்து எந்தவித வருமானமும் வராத நிலையில், சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பட்டதாரி இளைஞர், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பட்டதாரி இளைஞரிடம் இருந்து மொத்தமாக 11 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயோடு கம்பி நீட்டிய இணையவழி மோசடி கும்பலை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story