5ம் கட்ட தேர்தல்: 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு


5ம் கட்ட தேர்தல்: 8  மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
x

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.

லக்னோ,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாளை (20ம் தேதி) 5ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மராட்டியம் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (7 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஒடிசா (5 தொகுதிகள்) ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), ஜம்மு-காஷ்மீர் (1 தொகுதி), லடாக் (1 தொகுதி) என மொத்தம் 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கான முழு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் பணியும் நடைபெற்று வருகிறது.


Next Story