5ஜி சேவை தாமதம்- தொலைதொடர்பு, செல்போன் நிறுவனங்களுக்கு சம்மன்


5ஜி சேவை தாமதம்- தொலைதொடர்பு, செல்போன் நிறுவனங்களுக்கு சம்மன்
x

இந்தியாவில் 5ஜி சேவையை சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி,

இந்தியாவில் 5ஜி சேவையை சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 5ஜி தொலைத்தொடர்பு சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இன்னும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில்(5ஜி சேவை பொருந்தக்கூடிய போன்கள் மட்டும்) அதற்கான மென்பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து ,செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்பு துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதில் மத்திய தொலை தொடர்பு துறையால் புதன்கிழமை நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தொலை தொடர்பு செயலாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து முக்கிய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் 5ஜி அதிவேக இணையதள சேவையை செல்போன்களில் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.


Next Story