பாளையங்கோட்டை தசரா திருவிழா.. அம்மன் கோவில்களில் கால்நாட்டு விழா


பாளையங்கோட்டை தசரா திருவிழா..  அம்மன் கோவில்களில் கால்நாட்டு விழா
x

தரசா விழாவிற்காக பாளையங்கோட்டையில் உள்ள ஆயிரத்தம்மன் கோவில் மற்றும் பிற அம்மன் கோவில்களில் கால்நாட்டு வைபவம் நடைபெற்றது.

நெல்லை:

மைசூர், குலசேகரன்பட்டினம் போன்று நெல்லை மாநகரின் பாளையங்கோட்டையிலும் தசரா விழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தசரா விழா அடுத்த மாதம் 2-ம் தேதி அமாவாசை அன்று பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் கால்கோள் விழா நடைபெற்றது. இதற்காக மூல தெய்வமாக விளங்கும் பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் நேற்று காலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஆயிரத்தம்மன் அருள்பாலிக்க, பாிவார தேவதைகளுக்கு படையல் வைக்கப்பட்டது.

தொடா்ந்து கால்கோள் விழாவிற்கான கொடி கம்பத்தில், மஞ்சள் தடவி பூக்களால் அா்ச்சனை செய்யப்பட்டு திரிசூலம் பொறித்த கொடி கட்டப்பட்டு, மேளதாளம் முழங்க 8 ரதவீதிகளில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. காலை 10.40 மணிக்கு மேல் கோவில் ஈசான்யத்தில் கம்பம் நடப்பட்டது. பின்னா் கம்பத்திற்கும், மூலவா் அம்மனுக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இதே போல் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பிற அம்மன் கோவில்களான தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினி மாகாளி, வடக்கு உச்சினிமாகாளி, விஸ்வகர்மா உச்சினிமாகாளி, புதுப்பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் ஆகிய கோவில்களிலும் கால்நாட்டு வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, அக்டோபர் 12-ம் தேதி 12 சப்பரங்களில் அம்பாள் வீதியுலாவும், மகிஷாசுர சம்ஹாரமும் நடைபெற உள்ளது.

திருவிழா ஏற்பாடுகளை உபயதாரா்கள் மற்றும் கோவில் நிா்வாகத்தினா் செய்துள்ளனர். இன்று முதல் தசரா விழாவிற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கவும், பந்தல் போடுவது, 41 நாள் விரதம் இருப்பது மற்றும் சப்பரங்கள் நிற்கும் இடங்களை தூய்மைப் படுத்துதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.


Next Story