நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத் திருவிழா: கரூவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி


நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத் திருவிழா: கரூவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி
x

கோபித்துக்கொண்டு சென்ற கருவூர் சித்தருக்கு, மானூரில் நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்.

நெல்லை,

நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலை என 2 வேளையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக, கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சிகொடுத்து சாபவிமோசனம் பெறும் நிகழ்வு மானூர் அம்பலவாணர் திருக்கோவிலில் நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவில் கருவூர் சித்தர் மானூருக்கு கோபித்துக் கொண்டு செல்லும் நிகழ்வு நெல்லையப்பர் கோவிலில் நடந்தது.

கருவூர் சித்தர், டவுன் நெல்லையப்பர் கோயிலுக்கு வந்தபோது, சுவாமியிடம் மறுமொழி ஒன்றும் கிடைக்காததால் வெகுண்டெழுந்து நெல்லையப்பருக்கு சாபமிட்டுவிட்டு, மானூருக்கு சென்றார். இந்நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் நேற்று இரவு கருவூர் சித்தர் நெல்லையப்பர் கோயில் வாசலில் நின்று 'நெல்லையப்பா, நெல்லையப்பா' என அழைக்க சித்தாின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக நெல்லையப்பர் செவிசாய்க்காமல் இருந்ததார்.

இதனால் கோபமடைந்த சித்தர் 'எருக்கு ஏழுக ஈசன் இங்கு இல்லை' என சாபம் கொடுத்து விட்டு, ரதவீதிகளில் வீதியுலா சென்று நெல்லையை அடுத்த மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுக்கு சென்றடையும் நிகழ்வு நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்தது.

இதையடுத்து நேற்று இரவு நெல்லையப்பர், சந்திரசேகர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், அகஸ்தியர், தாமிரபரணி அம்பாள், குங்குலிய கலய நாயனார் ஆகியோர் சூழ பல்லக்கிலும், சப்பரத்திலும் சங்கரன்கோவில் சாலையில் மானூர் சென்றனர். இன்று காலை சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இறைவன் தரிசனம் பெற்றதால் மனம் மகிழ்ந்த சித்தர் 'எனக்கு காட்சி கொடுத்த ஆவணி மூல திருநாள் அன்று ஒவ்வொரு வருடமும் காட்சி தர வேண்டும்' என இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.


Next Story