'காந்தாரா சாப்டர் 1'ல் சிவகார்த்திகேயன் பட நடிகை


காந்தாரா சாப்டர் 1ல் சிவகார்த்திகேயன் பட நடிகை
x

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சாப்டர் 1’ல் ருக்மிணி வசந்த் நாயகியாக நடிக்கிறார்.

ஹைதராபாத்,

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம்'காந்தாரா'. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகிரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. காந்தாரா திரைப்படத்தில் ரிஷப் 3 விதமான தோற்றங்களில் நடித்திருந்தார். இதில் அவர் ஏற்று நடித்த பஞ்சுருளி தெய்வ கதாபாத்திரம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு கூறியிருந்தது. ஆனால்,அது காந்தாரா படத்தின் முதல் பாகம் என்று அறிவித்த படக்குழு, அதற்கு காந்தாரா: சாப்டர் 1 என்று டைட்டில் வைத்துள்ளது. இந்தப் படத்துக்கான பூஜை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. இந்நிலையில் இதில் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

இந்தப் படம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டில், கடம்ப வம்ச ஆட்சியின் பின்னணியில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பூதகோலா ஆட்டத்தின் ஒரு பகுதியாக வணங்கப்படும் பஞ்சுர்லி தெய்வத்தின் பூர்வீகத்தை இந்தப் படம் பேசும் என்கிறார்கள்.

கன்னட நடிகையான இவர் தமிழில் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.





Next Story