வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணியில் நடிகை ரித்திகா சிங்


வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணியில்  நடிகை ரித்திகா சிங்
x

வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நடிகை ரித்திகா சிங் டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இதில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள பகத் பாசில் தனது டப்பிங் பணிகளை ஏற்கனவே முடித்துவிட்டார். துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் இப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். துஷாரா அவரது டப்பிங் பணிகளை சில நாட்களுக்கு முன் முடித்தார். அடுத்ததாக ரித்திகா சிங் அவரது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். அவர் டப்பிங் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story