ஜூனியர் என்.டி.ஆர் பகிர்ந்த 'தேவரா' படத்தின் படப்பிடிப்பு புகைப்படம்


ஜூனியர் என்.டி.ஆர் பகிர்ந்த தேவரா படத்தின் படப்பிடிப்பு புகைப்படம்
x

ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள 'தேவரா' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன.

சென்னை,

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ரத்னவேலு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தன. அனிரூத் இசையில் 'தேவரா' படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும் 'பத்தவைக்கும்' என்ற என்ற பாடலின் படப்பிடிப்பு வீடியோவை நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தநிலையில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், படப்பிடிப்பின் போது இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் உரையாடலில் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். "தேவரா பாகம்-1 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டேன். என்ன ஒரு அற்புதமான பயணம், நான் அன்பின் கடல் போன்ற படக்குழுவை இழக்கிறேன் என்றும், வருகிற செப்டம்பர் 27-ந் தேதி படம் வெளியாகும் வரை என்னால் காத்திருக்க முடியவில்லை" என்றும் குறிப்பிட்டு அதில் பதிவிட்டுள்ளார்.


Next Story