புதிய நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள ஜெயம் ரவி !


புதிய நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள ஜெயம் ரவி !
x

பி.டி.ஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. இவர் தற்பொழுது 'பிரதர்', 'ஜீனி' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில், 'பிரதர்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 31-ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக ஜெயம் ரவியின் 34-வது (ஜெ.ஆர் 34) படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்தநிலையில், தற்போது "ரெட்ட தல, சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ், டிமான்டி காலனி 2" போன்ற படங்களை தயாரித்த பி.டி.ஜி யுனிவர்சல் நிறுவனத்துடன் நடிகர் ஜெயம் ரவி இணைந்துள்ளார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தொடர்ந்து இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த இரண்டு படங்களையும் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் ஷங்கரின் உதவி இயக்குனர் அருள் சக்தி முருகன் ஆகியோர் இயக்க உள்ளனர்.

இதற்கிடையில் பி.டி.ஜி யுனிவர்சல் நிறுவனம் ஜெயம் ரவியை வைத்து புதிய படங்களை தயாரிக்க உள்ளோம், விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என்று கூறியுள்ளது. மேலும் இது குறித்த பதிவையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.


Next Story