'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு


நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு
x

நடிகர் ஆனந்தின் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

ஹிப்ஹாப் ஆதி இயக்கிய 'மீசைய முறுக்கு' படத்தில் தனது நடிப்பு திறமையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆனந்த். இவர் தற்போது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது விஜய் நடிப்பில் 'கோட்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பாளராகவும் உருவெடுத்த நிலையில் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.

ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பவானி ஸ்ரீ, மோனிகா, இர்பான் மற்றும் ஆர்.ஜே.விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான பாடல்களை தனுஷ் மற்றும் ஜி.வி பிரகாஷ் பாடியுள்ளனர். இந்த படமானது, இளைய தலைமுறையினரின் நட்பை பற்றிய கருத்தை மையமாக கொண்ட படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு சுனில் காஷிப் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்திற்கான ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இயக்குனர் வெங்கட் பிரவு தனது எக்ஸ் தள பக்கத்தில் இப்படம் வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.


Next Story