'டிமான்ட்டி காலனி 3' குறித்து அஜய் ஞானமுத்து கொடுத்த அப்டேட்


டிமான்ட்டி காலனி 3 குறித்து அஜய் ஞானமுத்து கொடுத்த அப்டேட்
x

டிமான்ட்டி காலனி படத்தின் மூன்றாம் பாகம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் வம்சம், மௌனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, கழுவேத்தி மூர்க்கன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2015-ம் ஆண்டு அருள்நிதி, டிமான்ட்டி காலனி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து 'டிமான்ட்டி காலனி ' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'டிமான்ட்டி காலனி 2' படத்தில் அருள்நிதி தவிர பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் ஹரிஷ் கண்ணன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டிமான்ட்டி காலனி - 2 திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம் முதல்நாளில் மட்டும் ரூ.2.76 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிமான்ட்டி காலனி - 2 திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். படத்தின் வசூல் மற்றும் புக்கிங்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் படத்தின் அடுத்த பாகத்தை குறித்து இயக்குனர் அஜய் சமீபத்தில் நடந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

படத்தின் தொடர்ச்சியாக அடுத்து இரண்டு பாகங்கள் எடுக்கப்போவதாக கூறியுள்ளார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த வேறு ஒரு படம் இயக்கிவிட்டு மீண்டும் டிமான்ட்டி காலனி 3 படத்தை இயக்கப்போவதாகவும். 3ம் பாகம் 2026ம் ஆண்டு வெளியாகும் என கூறியுள்ளார்.


Next Story