நடிகை சமந்தா குறித்து சர்ச்சை கருத்து: தெலுங்கானா மந்திரிக்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கண்டனம்


நடிகை சமந்தா குறித்து சர்ச்சை கருத்து: தெலுங்கானா மந்திரிக்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கண்டனம்
x

நடிகை சமந்தா குறித்த தெலுங்கானா மந்திரியின் சர்ச்சை பேச்சுக்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா. இவர் 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அவர்கள் அறிவித்தாலும், சரியான காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை. அதன் பிறகு நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். நிச்சயதார்த்தமும் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்தது.

இதற்கிடையே சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் செயல் நிர்வாக தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனுமான கே.தாரக ராமாராவ்தான் காரணம் என்று கூறி தெலுங்கானா மந்திரி கொண்டா சுரேகா சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மந்திரி சுரேகாவின் இந்த சர்ச்கையான பேச்சிற்கு நடிகர் நானி, நாக சைதன்யா மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்டோர் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், தான் கூறிய கருத்துகளை திரும்ப பெறுவதாக மந்திரி சுரேகா தெரிவித்தார். மேலும் நடிகை சமந்தாவும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கொண்டா சுரேகா சமந்தா விட மன்னிப்பு கோரி பதிவு ஒன்றினையும் வெளியிட்டிருந்தார். மேலும் தெலுங்கானா காங்கிரஸ் மந்திரி கொண்டா சுரேகா மீது நடிகர் நாகார்ஜுனா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தனது சமூக வலைதள பக்கத்தில், "எல்லைகளை மதிக்க வேண்டும். கண்ணியத்தை பராமரிக்க வேண்டும். பொது அதிகாரிகள் செய்யும்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பொறுத்துக் கொள்ள முடியாதது" என்று பதிவிட்டு கொண்டா சுரேகாவின் சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story