ஒரு வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டிய 'அரண்மனை 4'


ஒரு வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டிய அரண்மனை 4
x

இயக்குநர் சுந்தர் சி இயக்கி, நடித்துள்ள ‘அரண்மனை 4' திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது.

தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் நடித்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் 'அரண்மனை 4' படம் உருவாகியது.

இப்படத்தின் முந்தைய 3 பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.இந்நிலையில் கடந்த 3 -ந்தேதி 'அரண்மனை 4' படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. இப்படம் வெளியான தியேட்டர்களில் "ஹவுஸ்புல்" காட்சிகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

படத்தின் வசூல் விமர்சனங்களைத் தாண்டி பெரியளவில் உள்ளது. முதல் வாரத்தில் இந்த படம் வசூலில் 50 கோடி ரூபாயைத் தாண்டி வெற்றிகரமாக சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வாரம் புதுப்படங்கள் ரிலீஸான போதும் அரண்மனை-4 படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.


Next Story