அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?


அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
x

கோப்புப்படம்

அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி

அரியலூர்

பெரம்பலூர்

தஞ்சை

திருவாரூர்

புதுக்கோட்டை

திருச்சி

கரூர்

நாமக்கல்

திண்டுக்கல்

தருமபுரி

காஞ்சிபுரம்

கடலூர்

கள்ளக்குறிச்சி

திருப்பூர் அகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story