தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 11 Sep 2024 11:57 AM GMT (Updated: 11 Sep 2024 1:29 PM GMT)

தென்காசி, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வருகிற 16-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story