10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு


10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 10 Sep 2024 2:21 PM GMT (Updated: 12 Sep 2024 1:47 AM GMT)

10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தருமபுரி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


Next Story