பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை இறுதி சுற்றுக்கு தகுதி


பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை இறுதி சுற்றுக்கு தகுதி
x

image courtesy: AFP

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் வெற்றி பெற்றுள்ளார்.

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஒலிம்பிக்'போட்டி பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகளான இளவேனில், ரமிதா ஜிண்டால் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலில் ரமிதா ஜிண்டால் சிறப்பாக செயல்பட்டு 5-வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான இளவேனில் 10-வது இடத்தை பிடித்து வெளியேறினார்.


Next Story