பாரீஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி


பாரீஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி
x

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான குத்துச்சண்டை 75 கிலோ கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை லவ்லினா, சீனாவை சேர்ந்த லி கியான் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லி கியான் 4-1 என்ற புள்ளி கணக்கில் லவ்லினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

காலிறுதியில் தோல்வியை தழுவிய லவ்லினா தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.


Next Story