ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை நிகத் ஜரின் அதிர்ச்சி தோல்வி


ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை நிகத் ஜரின் அதிர்ச்சி தோல்வி
x

காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனையை நிகத் ஜரின் எதிர்கொண்டார்.

பாரீஸ்,

பாரீஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் நிகத் ஜரின் போட்டியிட்டார். உலக சாம்பியனான நிகத் ஜரின், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்தியர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார்.

அவர், இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனை வு யுவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை வு யுவிடம் 5-0 என்ற கணக்கில் நிகத் ஜரின் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். இதனால் ஒலிம்பிக்கில் நிகத் ஜரினின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.


Next Story