உலகக்கோப்பை அரையிறுதி: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு


தினத்தந்தி 27 Jun 2024 3:24 PM GMT (Updated: 27 Jun 2024 3:33 PM GMT)

டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

கயானா,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இந்த சூழலில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த ஆட்டம் கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு நடைபெற இருந்தது.

இந்த சூழலில் ஆட்டம் நடைபெற உள்ள கயானாவில் பலத்த மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மழை பெய்வது முற்றிலும் நின்றது. இரவு 8.30 மணிக்கு மீண்டும் ஆடுகளம் பரிசோதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலாவதாக களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story