மகளிர் ஆசிய கோப்பை; நேபாளத்திற்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு


மகளிர் ஆசிய கோப்பை; நேபாளத்திற்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
x

image courtesy: twitter/@BCCIWomen

தினத்தந்தி 23 July 2024 1:06 PM GMT (Updated: 23 July 2024 1:12 PM GMT)

மகளிர் ஆசிய கோப்பை தொடரின் இன்றைய 2-வது ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் விளையாடுகின்றன.

தம்புல்லா,

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இன்று நடைபெறுகின்ற 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி நேபாளத்துடன் மோதுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி நேபாளம் முதலில் பந்துவீச உள்ளது.


Next Story