டி.என்.பி.எல்.: வாசீம் அகமது, சஞ்சய் அதிரடி... திருச்சி 193 ரன்கள் குவிப்பு


டி.என்.பி.எல்.: வாசீம் அகமது, சஞ்சய் அதிரடி... திருச்சி 193 ரன்கள் குவிப்பு
x

image courtesy: twitter/@TNPremierLeague

தினத்தந்தி 9 July 2024 3:30 PM GMT (Updated: 9 July 2024 3:41 PM GMT)

திருச்சி தரப்பில் அதிகபட்சமாக வாசீம் அகமது 90 ரன்கள் குவித்தார்.

சேலம்,

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன அர்ஜுன் மூர்த்தி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷியான் சுந்தர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன வாசீம் அகமது ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.

இதன்பின் வாசீம் அகமதுவுடன் சஞ்சய் யாதவ் கை கோர்த்தார். இருவரும் அதிரடியில் மிரட்ட அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

இவர்களின் அதிரடியால் திருச்சி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக வாசீம் அகமது 90 ரன்களும், சஞ்சய் யாதவ் 60 ரன்களும் குவித்தனர். மதுரை தரப்பில் குர்ஜப்னீத் சிங் மற்றும் அலெக்சாண்டர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி மதுரை களமிறங்க உள்ளது.


Next Story