மாநாட்டுக்கு வந்தபோது சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்


மாநாட்டுக்கு வந்தபோது சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்
x

கோப்புப்படம்


தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்தபோது சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் விஜய்கலை, கழகத் தோழர்கள் வசந்தகுமார், ரியாஸ், உதயகுமார், சார்லஸ் ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.

கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story