ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கத்தை பேணிக் காப்போம்: தவெக உறுதிமொழி


ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கத்தை பேணிக் காப்போம்: தவெக உறுதிமொழி
x

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி,

தவெக முதல் மாநாட்டில் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசிக்க தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

உறுதிமொழிகள் பின்வருமாறு:-

* நமது நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து, வீரத்துடன் போராடி, உயிர் நீத்த எண்ணெற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்

* நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

* சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.

* இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்புள்ள தனி மனிதனாக செயல்படுவேன்;

* மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக கடமையாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்.

* சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.

* 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.


Next Story