பொது சேவை செய்ய விஜய் விரும்புகிறார்; தவெக மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்-எடப்பாடி பழனிசாமி


பொது சேவை செய்ய விஜய் விரும்புகிறார்; தவெக மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்-எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 22 Oct 2024 8:44 AM GMT (Updated: 22 Oct 2024 11:20 AM GMT)

விஜய் பொதுக்கூட்டத்திற்கு மட்டுமல்ல, அதிமுக போராட்டங்களுக்கும் திமுக அரசு அனுமதி மறுப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் 36 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.அதிமுக ஆட்சியில் அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ளது, அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சியை பிடிக்க ஆசை இருக்கலாம், ஆனால் மக்கள் தான் முடிவெடுப்பார்கள். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். திரையுலகில் விஜய் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்;அவருக்கென ரசிகர் பட்டாளம் உள்ளது; அவரும் பொது சேவை செய்யவேண்டுமென்று விரும்புகிறார்; கட்சி தொடங்கியுள்ளார்;தவெக மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்.

விஜய் பொதுக்கூட்டத்திற்கு மட்டுமல்ல, அதிமுக போராட்டங்களுக்கும் திமுக அரசு அனுமதி மறுத்துள்ளது. தி.மு.க.வில் நிறைய கூட்டணி கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தி.மு.க.வை பிடித்து கொண்டிருக்கிறார்கள். இதில் மேலே இருக்கிற கூட்டணி கட்சி தலைவர் கையை விட்டால் கடைசியில் இருக்கிற தி.மு.க.வின் கதி என்னாவது? அப்படித்தான் தி.மு.க.வின் நிலை இன்றைக்கு நிலவுகிறது.கூட்டணி கட்சியினர் கைவிட்டால் தி.மு.க. வீழ்ந்து போய் விடும். ஆனால் அ.தி.மு.க. அப்படி இல்லை. வெற்றி, தோல்வி மாறி மாறி சந்தித்த கட்சி அ.தி.மு.க. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர வெற்றி கிடையாது. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர தோல்வி கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக வெற்றி, தோல்வி அமைவது இயற்கை. அதை நாம் தமிழகத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story