தைப்பூச விழா; மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில் சுவாமிமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலை ரெயில் நிலையத்திற்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை,
செங்கோட்டை மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் இரண்டு நாள்களுக்கு சுவாமி மலை ரெயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக சுவாமி மலை ரெயில் நிலையத்தில் இன்றும்(11.02.2025) மட்டும் நாளை(12.02.2025) செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்றுசெல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16847) பகல் 12.45 முதல் 12.46 வரையும், செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16848) பிற்பகல் 2.42 முதல் 2.43 வரை நின்றுசெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story