த.வெ.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - விஜய் பங்கேற்கிறார்

கோப்புப்படம்
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற 7-ம் தேதி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற 7-ம் தேதி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும், இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, வரும் 7-ம் தேதி (07.03.2025) மாலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கழகத் தலைவர் விஜய், இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இடம்: ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், ராயப்பேட்டை சென்னை
தேதி: 07.03.2025 வெள்ளிக்கிழமை
நோன்பு திறக்கும் நேரம்: மாலை, சரியாக 06.24 மணி
மக்ரிப் பாங்கு: மாலை, 06.28 மணி
மக்ரிப் தொழுகை: மாலை, 6.35 மணி (ஒய்.எம்.சி.ஏ. அரங்கிற்குள்)
மக்ரிப் தொழுகை முடிந்ததும் கழகத்தின் சார்பில் இப்தார் விருந்து நடைபெறும், என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.