ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது


ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2025 2:37 AM (Updated: 26 Jan 2025 8:08 AM)
t-max-icont-min-icon

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

ராமேஸ்வரம்,

ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடி தலைமன்னார் இடையே நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கே கடற்படை கப்பலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மேற்கண்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 2 விசைப்படகுகளில் சென்றிருந்த 18 மீனவர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜன. 26) அதிகாலை மேலும் ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 15 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்படையால் ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 33 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story