மதுபோதையில் தகராறு செய்த கணவனை கல்லால் அடித்துக்கொன்ற பெண்: மதுரையில் பரபரப்பு


மதுபோதையில் தகராறு செய்த கணவனை கல்லால் அடித்துக்கொன்ற பெண்: மதுரையில் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Aug 2024 1:23 AM GMT (Updated: 4 Aug 2024 5:16 PM GMT)

மதுரையில் மதுபோதையில் தகராறு செய்த கணவனை மனைவியே கல்லால் அடித்துக்கொலை செய்தார்.

மதுரை,

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி கோகிலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செந்தில்குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் வேலைக்கு செல்லாமல் தினமும் மதுகுடித்து விட்டு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் போதையில் வீட்டுக்கு வந்த செந்தில்குமார், மனைவி, மாமியாரை அவதூறாக திட்டியும், அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோகிலா, கணவர் செந்தில்குமாரை கீழே தள்ளி மரக்கட்டை, கல்லால் கடுமையாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேலூர் போலீசார் செந்தில்குமார் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக மனைவி கோகிலாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story