விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி; தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்


தினத்தந்தி 13 July 2024 12:01 AM GMT (Updated: 13 July 2024 10:39 AM GMT)

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 67,446 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


Live Updates

  • 13 July 2024 3:21 AM GMT

    விக்கிரவாண்டி முன்னிலை நிலவரம்:

    திமுக: 8,564 வாக்குகள்

    பாமக: 3,096

    நாம் தமிழர் கட்சி: 393

  • 13 July 2024 3:06 AM GMT

    இடைத்தேர்தல்- முன்னிலை நிலவரம்

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது: தற்போதைய முன்னிலை நிலவரம்

    திமுக: 1,200

    பாமக: 636

    நாம் தமிழர்:52

  • திமுக முன்னிலை
    13 July 2024 2:59 AM GMT

    திமுக முன்னிலை

     விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. தபால் ஓட்டுகளில் முன்னிலை பெற்றது போலவே மின்னணு வாக்கு எண்ணிக்கையிலும் திமுக முன்னிலையில் உள்ளது.

  • 13 July 2024 2:49 AM GMT



  • 13 July 2024 2:43 AM GMT

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா  130  வாக்குகள் பெற்றுள்ளார். 

  • 13 July 2024 2:41 AM GMT

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தபால் ஓட்டு எண்ணி முடித்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக மற்றொரு அறையில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகளை சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கவும், வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது, 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது.

  • 13 July 2024 2:38 AM GMT

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நா.த.க. சார்பில் அபிநயா ஆகியோர் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், காலை 11 மணிக்கு கிட்டத்தட்ட முடிவுகள் தெரிய வந்துவிடும்.

  • 13 July 2024 2:31 AM GMT

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 20 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முன்னிலை நிலவரம் சற்று நேரத்தில் தெரியவரும். 

  • 13 July 2024 1:42 AM GMT



  • 13 July 2024 1:35 AM GMT

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர். இது 82.47 சதவீத வாக்கு பதிவாகும்.

    ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்த தேர்தலில் வெற்றிபெறப்போவது யார் என்பது இன்று (சனிக்கிழமை) நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரியவந்துவிடும்.

    காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையொட்டி காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

    அதுபோல் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகளும் கொண்டு வரப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. அங்குள்ள தனி அறையில் 2 மேஜைகளில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக மற்றொரு அறையில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகளை சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கவும், வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது, 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது.

    காலை 11 மணிக்கு மேல் முன்னணி நிலவரங்கள் தெரியவரும். மதியத்துக்கு மேல் வெற்றி நிலவரமும் தெரிந்துவிடும். வாக்கு எண்ணும் பணியில் 14 கிராம உதவியாளர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் மற்றும் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் என 150 பேர் ஈடுபடுகின்றனர்.

    வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிக்க ஏதுவாக, வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 28 இன்ஸ்பெக்டர்கள், 86 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், துணை ராணுவப்படையினர் என 1,195 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story