பள்ளிக்கு செல்லாத மகன்.. மனவேதனையில் தாய் எடுத்த விபரீத முடிவு


பள்ளிக்கு செல்லாத மகன்.. மனவேதனையில் தாய் எடுத்த விபரீத முடிவு
x
தினத்தந்தி 1 Sep 2024 3:23 AM GMT (Updated: 1 Sep 2024 8:02 AM GMT)

இந்த சம்பவம் குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 35). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் அதே ஊரில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மகன் பள்ளிக்கு சரியாக செல்லாத காரணத்தினால்மனவேதனை அடைந்த இசக்கியம்மாள் கடந்த 23-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்து குடித்தார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் இசக்கியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இசக்கியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரியாக பள்ளிக்கு செல்லாத மகனால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story