முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 23 Jun 2024 5:01 AM GMT (Updated: 23 Jun 2024 5:28 AM GMT)

தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

நெட் தேர்வை தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது, நமது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

- தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான மற்றும் சமமான தேர்வு செயல்முறையை உருவாக்க வேண்டும்.

- தொழில்முறை தேர்வுமுறையில் பள்ளிக்கல்வியின் முக்கியத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்

- தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வுமுறையைத் தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.

- மிக முக்கியமாக, மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனதில் மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story