ஆயுத பூஜை : கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து


ஆயுத பூஜை : கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
x
தினத்தந்தி 11 Oct 2024 6:14 AM GMT (Updated: 11 Oct 2024 6:15 AM GMT)

இந்த ஆயுத பூஜை நமக்கு தேவையான படைப்பாற்றல் மற்றும் திறன்களை உரித்தாக்கட்டும் என கவர்னர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார்

சென்னை ,

ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர் என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை சுப தினத்தில் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! சரஸ்வதி தேவி நம் பாதையை தனது கலைத்திறன் மற்றும் ஆழ்ந்த ஞானத்தால் ஒளிரச் செய்து, அறியாமை இருளை அகற்றி, நம் அனைவருக்கும் வளத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும். இந்த ஆயுத பூஜை நமக்கு மிகச் சிறந்த புதுமை மற்றும் மீள்திறன் உலகை வடிவமைக்கத் தேவையான சிறந்த படைப்பாற்றல் மற்றும் திறன்களை உரித்தாக்கட்டும். ஒரே குடும்பமாக நாம் இணைந்து, 2047ஆம் ஆண்டுக்குள் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் முழுமையாக வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம். என தெரிவித்துள்ளார்


Next Story