தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்


தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்
x

தவளக்குப்பம் அருகே தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அடுத்து அபிஷேகப்பாக்கம் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் மீனா (வயது 35). இவரது கணவர் நரேஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மீனா வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மீனா வேலைக்கு சென்ற நேரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த விஷ்வா (19), மூத்த மகளிடம் பேச முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தனது தாயார் மீனாவிடம் தெரிவித்தார். இதையடுத்து மீனா விஷ்வாவிடம் தட்டிக்கேட்டார். அப்போது விஷ்வா தனது நண்பர் கவுதம் (22) என்பவருடன் சேர்ந்து பட்டாக்கத்தியை காட்டி மீனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் மீனாவின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த உறவினரின் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்வா, கவுதமை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


Next Story