தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியர்கள் தர்ணா


தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியர்கள் தர்ணா
x

புதுவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியர்கள் பணிநிரந்தரம் கோரி தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியர்கள் புதுவை வேலைவாய்ப்பகத்தின் மூலமும், நேர்காணல் மூலமும் கடந்த 2009-ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டனர். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிவறை கட்டும் பணியை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பணியிலிருந்தபோது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலைவழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அண்ணாநகரில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணாவுக்கு சங்க தலைவர் வேலுமணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முருகையன், செயலாளர் முனுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story