மதுவை விட முடியாத விரக்தியில் ஒப்பந்ததாரர் தற்கொலை


மதுவை விட முடியாத விரக்தியில் ஒப்பந்ததாரர் தற்கொலை
x

புதுவையில் மதுவை விட முடியாத விரக்தியில் ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி

புதுச்சேரி முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 41). இவருக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஜெயபிரகாஷ் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை வேலைக்கு அமர்த்தும் பணி செய்து வந்தார்.

மது குடிக்கும் பழக்கமுடைய ஜெயபிரகாஷ், அதில் இருந்து விடுபட கடந்த 3 மாதமாக கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்றார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் மீண்டும் மது குடிக்க தொடங்கினார். இதனை அவரது மனைவி பிரியா கண்டித்துள்ளார். இதனால் மதுவை விட முடியாத விரக்தியில் ஜெயபிரகாஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story