பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
x

திருக்கனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு பேட்டில் இடுகாடு கொட்டகையில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூதாடிக் கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 32), சரண்ராஜ் (28), அஜித்குமார் என்ற அஜித் (26), பிரவீன்ராஜ் (28), தரணிகுமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 200 மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story