கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது


கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
x

தவளக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் போலீசார் தனியார் டீ தூள் கம்பெனி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் வில்லியனூர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் சத்யராஜ் (வயது 23), மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள், மோட்டார் சைக்கிள், ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story