அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் - சந்திரபாபு நாயுடு அறிவுரை


அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் -  சந்திரபாபு நாயுடு அறிவுரை
x

தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அமராவதி,

தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு மேலும் கூறியதாவது:-

அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குவது குறித்து பரிசீலனை செய்கிறோம். 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வரலாமா என ஆலோசிக்கப்படுகிறது. தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைகிறது. ஆந்திரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள கிராமங்களில் வயதானவர்கள் மட்டுமே உள்ளனர்" என்றார்.


Next Story