தேர்வுகளில் தோல்வி... மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


தேர்வுகளில் தோல்வி... மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Sep 2024 3:04 AM GMT (Updated: 19 Sep 2024 3:14 AM GMT)

தேர்வுகளில் தோல்வி அடைந்ததால் மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டகன்னஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலக் அகர்வால் (வயது 23). இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் ஆகும். பெங்களூருவில் பெற்றோருடன் தங்கி இருந்து, தனியார் மருத்துவ கல்லூரியில் பாலக் அகர்வால் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த பாலக் அகர்வால் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த தாய் வீட்டுக்கு திரும்பிய போது தனது மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கல்லூரியில் நடந்த சில தேர்வுகளில் பாலக் அகர்வால் தோல்வி அடைந்திருந்தார். இதன்காரணமாக மனம் உடைந்து காணப்பட்ட அவர் தற்கொலை முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story