காங்கிரஸ் கட்சிக்குள் சிலர் பாஜகவிற்கு வேலை பார்க்கிறார்கள்: ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சிக்குள் பாஜகவுக்காக வேலை செய்பவர்களை வெளியேற்றவிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
அகமதாபாத்,
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சித் தொண்டர்களிடையே காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது: குஜராத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் கட்சியால் ஏன் நிறைவேற்ற முடியவில்லை? இதன் பதில் என்னவென்றால், கட்சிக்குள் இருவகையான தலைவர்கள் இருக்கின்றனர். ஒன்று, பொதுமக்களுடன் நின்று அவர்களுக்காக போராடுபவர்கள்.
மற்றொன்று, மக்களை மதிக்காமல் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறவர்கள். கட்சியின் இந்த இரு குழுக்களையும் பிரிப்பதுதான் எனது வேலை. இருபதோ முப்பதோ இருந்தாலும் பரவாயில்லை; அவர்களைக் கண்டிப்பாக வெளியேற்றுவோம். இதனைச் செய்வதன் மூலம் குஜராத் மக்களுக்கு காங்கிரஸ் மீதான நம்பிக்கையும் கூடும்.கட்சிக்குள் இருந்தாவாறு பாஜகவுக்கு வேலை செய்தால், கண்டிப்பாக அந்தக் கட்சிக்கே அனுப்பப்படுவீர்கள். ஆனால், அந்தக் கட்சியில் உங்களை ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக் கொள்ள மாட்டார்கள்" என்றார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சை பாஜக விமர்சித்துள்ளார். பாஜக இது தொடர்பாக கூறுகையில், குஜராத்தில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை என்பதை ராகுல் காந்தி ஒப்புக்கொண்டுள்ளார்" என்று சாடியுள்ளது.