பள்ளி நேரத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியர்


பள்ளி நேரத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியர்
x
தினத்தந்தி 24 Jun 2024 2:38 PM GMT (Updated: 25 Jun 2024 11:55 AM GMT)

வகுப்பறையில் ஆசிரியருடன் மனைவி ஒன்றாக இருப்பதை கண்டு கணவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்த குடேம் மாவட்டம் நெமலி பேட்டை கிராமத்தில் பழங்குடியினர் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் லவுடியா ராமதாஸ் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே ஊரைசேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

பள்ளி நேரத்தில் இருவரும் வகுப்பறையில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் பெண்ணின் கணவர் மனைவியை தேடி வந்தார். அப்போது வகுப்பறையில் ஆசிரியருடன் மனைவி ஒன்றாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வகுப்பறைக்குள் சென்று ஆசிரியரை சரமாரியாக தாக்கினார். மேலும் தகவலறிந்த போலீசார் கிராமத்திற்கு சென்று ஆசிரியரை மீட்டனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story