ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 111 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 22 ஆயிரத்து 508 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 293 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 48 ஆயிரத்து 354 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
341 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 74 ஆயிரத்து 169 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 239 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 23 ஆயிரத்து 529 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
69 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 10 ஆயிரத்து 893 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 394 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 55 ஆயிரத்து 706 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
கடந்த ஒரு மாதத்திற்குமேல் தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை தற்போது வெகுவாக ஏற்றம் பெற தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.